Tuesday 18 September 2012

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சியாமளா

திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சியாமளா: மாற்றுத் திறனாளிகளுக்கென, கடந்த ஐந்தாண்டுகளாக அவ்வப்போது, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறோம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

 பெல்சியா சங்கம், டி டீட்சியா சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கும், தங்கள் நிறுவனங்களில் வேலை போட்டுத் தர வேண்டுமென, அவர்களிடம் கேட்டுக் கொள்வோம். மேற்கண்ட அமைப்புகளின் பல நிறுவனங்களும், மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் வேலை வாய்ப்பளித்திட முன் வந்தது, எங்களின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி. கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் உடல் ஊனமற்றவர்கள் என, மொத்தம், 1,268 மாற்றுத் திறனாளிகளுக்குப் பல தனியார் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் என, பல வற்றிலும் வேலை பெற்றுத் தந்துள்ளோம்.

 நாங்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக ஊழியர்கள் அனைவருமே முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர், இன்றும் தந்து வருகின்றனர். அனைவரின் கடும் உழைப்பிற்குக் கிடைத்த பரிசே மத்திய அரசால், எனக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருது, கடமையைத் தவறாமல் செய்தால், அதுவே கடவுள் பணி.

Thursday 13 September 2012

நாங்களும் பதிவுலகில்...




எங்கள் அன்னை சரோஜா அறக்கட்டளை கடந்த மூன்றாண்டுகளாக , எண் 14, முதல்தளம், கொண்டமபுரம் தெரு, திருவள்ளூர்- 602001. தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. 

எங்கள் அறக்கட்டளை மூலம் மாற்று திறனாளிகளுக்கு கணினி பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குதல், கிராம மகளிருக்கும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் பல்வேறு சிறுதொழில் பயிற்சி அளித்து தொழில் துவங்க அனைத்து உதவிகளும் நாங்களே செய்துவருகிறோம். 

எங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளை தெரிவிக்க இந்த பிளாக்கை ஆரம்பித்துள்ளோம். நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்மிக்கையோடு...



என்றும் உங்கள்..

தங்கமணி. க.
நிறுவனர்,
அன்னை சரோஜா பவுண்டேசன்.
திருவள்ளூர்-602001.
Cell: 09750055618.