Saturday 6 October 2012

செட்டிநாடு சிக்கன்

 





  சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து., துண்டுகள் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் (2), நறுக்கிக் கொள்ளவும், தக்காளி (1) நறுக்கிக் கொள்ளவும், இஞ்சி (1"), பூண்டு (4 பல்) தட்டிக் கொள்ளவும். 
  மசாலா பொடி தயாரிக்கும் முறை (வற்றல் மிளகாய் (4), மிளகு (1/4 தேக்கரண்டி), தனியா (1 1/2 தேக்கரண்டி), சீரகம் (1 தேக்கரண்டி), பட்டை (1"), ஏலக்காய்(2), கிராம்பு (3), வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு, தேங்காய் துருவல் (1 1/2 மேசைக் கரண்டி) சேர்த்து அரைத்து உபயோகிக்கவும்).
  வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி., பட்டை (1/2"), கிராம்பு (2), கறிவேப்பிலை சிறிது போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் சிக்கன் கலவையைச் சேருங்கள். இத்துடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து சிக்கனை நன்றாக வேக வையுங்கள். எண்ணை மிதந்ததும் இறக்கவும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... செய்து பார்ப்போம்... நன்றி...